Search blog.co.uk

  • இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - சார்பு நிலை.

    ஊடகத்துறை கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் சுதந்திரமாகவே செயற்பட வேண்டும். இருந்தபோதிலும் அவை தமக்கென தனித்தன்மை வாய்ந்த சட்டதிட்டங்களையும் கோட்பாடுகளையும் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் அதன் செயற்பாடுகள் சமூக நலன் கருதிய கட்டுப்பாடுடைய பரந்து விரிந்த ஊடகமாக பரிணமிக்கும். ஆனால், துரதிர்ஸ்டவசமாக இலங்கையில் தொலைக்காட்சி மட்டுமின்றி வெகுஜன தொடர்பு சாதனங்கள் அனைத்துமே ஏதோவொரு வகையில் சார்புத்தன்மை மிக்கவையாகவே காணப்படுகின்றன. பொதுவாக அதன் செயற்பாட்டுத் தளத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகநலன், தேசப்பற்று போன்ற இன்னோரன்ன பல விடயங்களை மையமாகக் கொண்டே இவை செயற்படுகின்றன.

    அந்த வகையில் இக்கட்டுரையானது, இலங்கையின் தொலைக்காட்சி அலைவரிசைகளின் சார்பு நிலைகள் சிலவற்றையும், அதற்கான காரணங்களையும் சுருக்கமாகக் கூறுகின்றது.

    இலங்கை தொலைக்காட்சிகளில் மத்தியதர வர்க்கச் சார்பு, நகர்ப்புறச்சார்பு, மேலை நாடுகளின் சார்பு, பெரும்பான்மை மதச்சார்பு, பெரும்பான்மை இனச்சார்பு, ஆணாதிக்கச்சார்பு என்பவை பெரும்பாலும் காணப்படுகின்றன.

    தொலைக்காட்சி உட்பட அனைத்து வெகுஜன தொடர்பு சாதனங்களும் மத்தியதர வர்க்கத்தினரை சந்தோசப்படுத்தும் அல்லது திருப்திப்படுத்தம் வகையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. இது தொடர்பாக நோக்கும் போது ஆய்வாளர்களால் மூன்று விடயங்கள் தெளிவாக சொல்லப்படுகின்றன. இந்த வர்க்கத்தினரிடமே அதிகளவில் தொடர்பு சாதனங்களை உபயோகிக்கும் சக்தி இருக்கிறது. பெரும்பாலான விளம்பரங்கள் இவ்வர்க்கத்தை குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. இதில் பணியாற்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் இவ்வர்க்கத்தைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். எனவே இவ்வர்க்கத்தினர் உலகை எப்படிப் பார்க்கின்றார்களோ அப்படியே செய்திகளும் நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்படுகின்றன.

    தொலைக்காட்சி உட்பட தொடர்பு சாதனங்கள் அனைத்திலும் நகர்ப்புறச் சார்பை காணமுடிகிறது. பெரும்பாலான தொடர்பு சாதனங்களின் அனுகூலங்கள் நகர்ப்பகுதியிலேயே இருப்பதும் செய்திகளை சேகரிக்கவும் நிகழ்ச்சிகளை தயாரிக்கவும் எளிதாக இருப்பதும் இதற்கான காரணங்களாக உள்ளன. அத்தோடு கிராமத்தவர்களை விட வாசிப்புத்திறன், வருமான மட்டம் என்பன நகர்ப் புறத்தவர்களிடையே அதிகமாக காணப்படுவதும், இவர்களே தொலைக்காட்சியை அதிகளவில் பயன் படுத்துபவர்களாக இருப்பதும் இந்நகர்ப்புறச் சார்புக்கான காரணமாக உள்ளது.

    கீழைத்தேய நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கை காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கில மோகமும் மேற்குலக நாடுகளின் கலாசாரத் தாக்கமும் இன்னும் நிலைத்திருக்கின்றன. உலகமயமாக்கத்தின் காரணமாக இதன் தாக்கம் மேலும் அதிகரித்து வருகின்றது. கிளின்டன் - மோனிக்கா சர்ச்சை, டயானா விவகாரம், ஒசாமா பின்லேடன், சதாம் உசைன் விவகாரம் முதல் இன்று ஏற்பட்டுள்ள அமெரிக்க - ஈராக் - ஈரான் பிணக்குகள் வரை பல்வேறு மேல் நாட்டு விடயங்கள் எம்மை வந்தடைவதற்கும் அதன்பால் எமது நாட்டம் செல்வதற்கும் வழியேற்படுத்துவது இம்மேல் நாடுகள் சார்பான நிகழ்ச்சிகளேயாகும். ஆகவே, உலகச் செய்திகளை சேகரித்துத் தருவதும் அதனால் மக்கள் ஈர்க்கப் படுவதும் அதன் நீடிப்புத் தன்மைக்கு வழிவகுத்துள்ளது.

    அரச அங்கீகாரம் பெற்ற பெரும்பாலான தொலைக்காட்சிகள் இலங்கையில் குறிப்பிட்டதொரு பெரும்பான்மை இனக்குழுவினரால் பின்பற்றப்பட்டு வரும் பௌத்த மதத்திற்கே சார்பாக உள்ளன. ஏனைனில், அவற்றில் பணியாற்றுவோரில் அதிகமானவர்கள் அம்மதத்தைச் சார்ந்தவர்களே. குறிப்பாக சுயாதீன தொலைக்காட்சி, ரூபவாஹினி, சனல் ஐ, சுவர்ணவாஹினி, சிரச, தெரண போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் பூரணை தினங்கள் பௌத்த மத விசேட தினங்கள் போன்றவற்றில் அதிகளவான நேரத்தை பௌத்த மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கே ஒதுக்குகின்றன.
    குறிப்பிட்டதொரு தினம் வேறு மதத்தினருக்கும் வேறு மதத்தினருக்கும் விசேட தினமாக இருக்கும் பட்சத்தில் கூட இது கவனிக்கப் படுவதில்லை.

    இதற்கு அண்மைக்கால சிறந்த எடுத்துக்காட்டு - 2006 ஏப்ரல் மாதம் 13ம் திகதி இலங்கையில் மட்டுமின்றி உலகில் வாழும் கத்தோலிக்க, கிறிஸ்தவர்களின் புனித தினமாகிய பெரிய வெள்ளிக்கிழமைக்கு முந்திய தினமாகிய வழிபாட்டுக்குரிய பெரிய வியாழக்கிமையாகும். இதே தினம் பூரணை தினமுமாகும். இத்தினமானது இரண்டு மதங்களுக்குமான விசேட தினமாக இருந்த போதிலும் பூரணை தினமாக மட்டுமே அடையாளப் படுத்தப்பட்டு அதிகமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. அதேபோன்று அதற்கு இரு தினங்கள் முந்திய 2006 ஏப்ரல் 11 இஸ்லாமியரின் ‘மீலாதுள் நபி’ தினமாகும். ஆனால் அத்தினத்திற்கான நிகழ்ச்சிகளும் அதிகமாக ஒளிபரப்பாகவில்லை.

    பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கையில் குறிப்பிட்டதொரு இனம் அதிகமாக வாழ்கின்றது. அதனால். ஏற்பட்டிருக்கும் அரசியல் சாதக நிலைமையால் ஜனநாயக ரீதியில் அதுவே ஆட்சியமைக்கின்றது. ஒன்றோடொன்று தொடர்புபட்ட இக்காரணங்களால் அவ்வினம் சார்ந்தே அதிகமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. வர்த்தக நோக்கம் கருதியதாக இவை இவ்வாறு இடம்பெறுகின்றன என்று சொல்லப்படுகின்ற போதிலும், அதற்கப்பால் உள்ள இனத்துவம் மற்றும் அரசியல் சார் சிக்கல்களே இதற்கான முக்கிய காரணமென்று ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

    இலங்கை ஆணாதிக்க சமூக அமைப்பை கொண்டிருப்பதால் தொலைக்காட்சி மட்டுமின்றி தொடர்பு சாதனங்கள் அனைத்துமே ஆணாதிக்க சார்புடையனவாக உள்ளன. தொலைக்காட்சி தயாரிப்புத் துறையில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவு. அதனால் பெண் பற்றிய ஆண்களின் கருத்தியல்களுக்கு அமைவாகவே நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. பெண்களை இரண்டாம் நிலையானவர்களாக கருதும் போக்கே காணப்படுகிறது. குறிப்பாக பாலியல் பலாத்காரம், அடிமைத்தனம், வீட்டுக்கு மட்டுமே உரியவள், கணவனுக்குக் கட்டுப்பட்டவள் போன்ற பல்வேறு பட்ட கருத்தியல்கள், பழமொழிகள் ஊடாக பெண்களை ஓர் குறிப்பிட்ட வட்டத்திற்கு உட்பட்டவளாக ஆணாதிக்க சார்பினை நிலை நிறுத்தி வருகின்றனர்.

    இவ்வாறாக நோக்கும் போது இலங்கை தொலைக்காட்சிகளில் சார்புநிலை என்பது பிரித்தெடுக்க முடியாத வகையில் ஆழ வேரூன்றி விட்டது என்றே கருத வேண்டியுள்ளது. இந்நிலை தொடரும் போது அது ஆரோக்கியமான தொலைக்காட்சித் துறை வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும் என்பது சுதந்திரமான ஆய்வுகளின் மூலம் பெறப்படும் தெட்டத் தெளிவான உண்மையாகும்.

    எஸ். மோசேஸ்

    இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - சார்பு நிலை.

    ஊடகத்துறை கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் சுதந்திரமாகவே செயற்பட வேண்டும். இருந்தபோதிலும் அவை தமக்கென தனித்தன்மை வாய்ந்த சட்டதிட்டங்களையும் கோட்பாடுகளையும் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் அதன் செயற்பாடுகள் சமூக நலன் கருதிய கட்டுப்பாடுடைய பரந்து விரிந்த ஊடகமாக பரிணமிக்கும். ஆனால், துரதிர்ஸ்டவசமாக இலங்கையில் தொலைக்காட்சி மட்டுமின்றி வெகுஜன தொடர்பு சாதனங்கள் அனைத்துமே ஏதோவொரு வகையில் சார்புத்தன்மை மிக்கவையாகவே காணப்படுகின்றன. பொதுவாக அதன் செயற்பாட்டுத் தளத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகநலன், தேசப்பற்று போன்ற இன்னோரன்ன பல விடயங்களை மையமாகக் கொண்டே இவை செயற்படுகின்றன.

    அந்த வகையில் இக்கட்டுரையானது, இலங்கையின் தொலைக்காட்சி அலைவரிசைகளின் சார்பு நிலைகள் சிலவற்றையும், அதற்கான காரணங்களையும் சுருக்கமாகக் கூறுகின்றது.

    இலங்கை தொலைக்காட்சிகளில் மத்தியதர வர்க்கச் சார்பு, நகர்ப்புறச்சார்பு, மேலை நாடுகளின் சார்பு, பெரும்பான்மை மதச்சார்பு, பெரும்பான்மை இனச்சார்பு, ஆணாதிக்கச்சார்பு என்பவை பெரும்பாலும் காணப்படுகின்றன.

    தொலைக்காட்சி உட்பட அனைத்து வெகுஜன தொடர்பு சாதனங்களும் மத்தியதர வர்க்கத்தினரை சந்தோசப்படுத்தும் அல்லது திருப்திப்படுத்தம் வகையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. இது தொடர்பாக நோக்கும் போது ஆய்வாளர்களால் மூன்று விடயங்கள் தெளிவாக சொல்லப்படுகின்றன. இந்த வர்க்கத்தினரிடமே அதிகளவில் தொடர்பு சாதனங்களை உபயோகிக்கும் சக்தி இருக்கிறது. பெரும்பாலான விளம்பரங்கள் இவ்வர்க்கத்தை குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. இதில் பணியாற்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் இவ்வர்க்கத்தைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். எனவே இவ்வர்க்கத்தினர் உலகை எப்படிப் பார்க்கின்றார்களோ அப்படியே செய்திகளும் நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்படுகின்றன.

    தொலைக்காட்சி உட்பட தொடர்பு சாதனங்கள் அனைத்திலும் நகர்ப்புறச் சார்பை காணமுடிகிறது. பெரும்பாலான தொடர்பு சாதனங்களின் அனுகூலங்கள் நகர்ப்பகுதியிலேயே இருப்பதும் செய்திகளை சேகரிக்கவும் நிகழ்ச்சிகளை தயாரிக்கவும் எளிதாக இருப்பதும் இதற்கான காரணங்களாக உள்ளன. அத்தோடு கிராமத்தவர்களை விட வாசிப்புத்திறன், வருமான மட்டம் என்பன நகர்ப் புறத்தவர்களிடையே அதிகமாக காணப்படுவதும், இவர்களே தொலைக்காட்சியை அதிகளவில் பயன் படுத்துபவர்களாக இருப்பதும் இந்நகர்ப்புறச் சார்புக்கான காரணமாக உள்ளது.

    கீழைத்தேய நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கை காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கில மோகமும் மேற்குலக நாடுகளின் கலாசாரத் தாக்கமும் இன்னும் நிலைத்திருக்கின்றன. உலகமயமாக்கத்தின் காரணமாக இதன் தாக்கம் மேலும் அதிகரித்து வருகின்றது. கிளின்டன் - மோனிக்கா சர்ச்சை, டயானா விவகாரம், ஒசாமா பின்லேடன், சதாம் உசைன் விவகாரம் முதல் இன்று ஏற்பட்டுள்ள அமெரிக்க - ஈராக் - ஈரான் பிணக்குகள் வரை பல்வேறு மேல் நாட்டு விடயங்கள் எம்மை வந்தடைவதற்கும் அதன்பால் எமது நாட்டம் செல்வதற்கும் வழியேற்படுத்துவது இம்மேல் நாடுகள் சார்பான நிகழ்ச்சிகளேயாகும். ஆகவே, உலகச் செய்திகளை சேகரித்துத் தருவதும் அதனால் மக்கள் ஈர்க்கப் படுவதும் அதன் நீடிப்புத் தன்மைக்கு வழிவகுத்துள்ளது.

    அரச அங்கீகாரம் பெற்ற பெரும்பாலான தொலைக்காட்சிகள் இலங்கையில் குறிப்பிட்டதொரு பெரும்பான்மை இனக்குழுவினரால் பின்பற்றப்பட்டு வரும் பௌத்த மதத்திற்கே சார்பாக உள்ளன. ஏனைனில், அவற்றில் பணியாற்றுவோரில் அதிகமானவர்கள் அம்மதத்தைச் சார்ந்தவர்களே. குறிப்பாக சுயாதீன தொலைக்காட்சி, ரூபவாஹினி, சனல் ஐ, சுவர்ணவாஹினி, சிரச, தெரண போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் பூரணை தினங்கள் பௌத்த மத விசேட தினங்கள் போன்றவற்றில் அதிகளவான நேரத்தை பௌத்த மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கே ஒதுக்குகின்றன.
    குறிப்பிட்டதொரு தினம் வேறு மதத்தினருக்கும் வேறு மதத்தினருக்கும் விசேட தினமாக இருக்கும் பட்சத்தில் கூட இது கவனிக்கப் படுவதில்லை.

    இதற்கு அண்மைக்கால சிறந்த எடுத்துக்காட்டு - 2006 ஏப்ரல் மாதம் 13ம் திகதி இலங்கையில் மட்டுமின்றி உலகில் வாழும் கத்தோலிக்க, கிறிஸ்தவர்களின் புனித தினமாகிய பெரிய வெள்ளிக்கிழமைக்கு முந்திய தினமாகிய வழிபாட்டுக்குரிய பெரிய வியாழக்கிமையாகும். இதே தினம் பூரணை தினமுமாகும். இத்தினமானது இரண்டு மதங்களுக்குமான விசேட தினமாக இருந்த போதிலும் பூரணை தினமாக மட்டுமே அடையாளப் படுத்தப்பட்டு அதிகமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. அதேபோன்று அதற்கு இரு தினங்கள் முந்திய 2006 ஏப்ரல் 11 இஸ்லாமியரின் ‘மீலாதுள் நபி’ தினமாகும். ஆனால் அத்தினத்திற்கான நிகழ்ச்சிகளும் அதிகமாக ஒளிபரப்பாகவில்லை.

    பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கையில் குறிப்பிட்டதொரு இனம் அதிகமாக வாழ்கின்றது. அதனால். ஏற்பட்டிருக்கும் அரசியல் சாதக நிலைமையால் ஜனநாயக ரீதியில் அதுவே ஆட்சியமைக்கின்றது. ஒன்றோடொன்று தொடர்புபட்ட இக்காரணங்களால் அவ்வினம் சார்ந்தே அதிகமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. வர்த்தக நோக்கம் கருதியதாக இவை இவ்வாறு இடம்பெறுகின்றன என்று சொல்லப்படுகின்ற போதிலும், அதற்கப்பால் உள்ள இனத்துவம் மற்றும் அரசியல் சார் சிக்கல்களே இதற்கான முக்கிய காரணமென்று ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

    இலங்கை ஆணாதிக்க சமூக அமைப்பை கொண்டிருப்பதால் தொலைக்காட்சி மட்டுமின்றி தொடர்பு சாதனங்கள் அனைத்துமே ஆணாதிக்க சார்புடையனவாக உள்ளன. தொலைக்காட்சி தயாரிப்புத் துறையில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவு. அதனால் பெண் பற்றிய ஆண்களின் கருத்தியல்களுக்கு அமைவாகவே நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. பெண்களை இரண்டாம் நிலையானவர்களாக கருதும் போக்கே காணப்படுகிறது. குறிப்பாக பாலியல் பலாத்காரம், அடிமைத்தனம், வீட்டுக்கு மட்டுமே உரியவள், கணவனுக்குக் கட்டுப்பட்டவள் போன்ற பல்வேறு பட்ட கருத்தியல்கள், பழமொழிகள் ஊடாக பெண்களை ஓர் குறிப்பிட்ட வட்டத்திற்கு உட்பட்டவளாக ஆணாதிக்க சார்பினை நிலை நிறுத்தி வருகின்றனர்.

    இவ்வாறாக நோக்கும் போது இலங்கை தொலைக்காட்சிகளில் சார்புநிலை என்பது பிரித்தெடுக்க முடியாத வகையில் ஆழ வேரூன்றி விட்டது என்றே கருத வேண்டியுள்ளது. இந்நிலை தொடரும் போது அது ஆரோக்கியமான தொலைக்காட்சித் துறை வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும் என்பது சுதந்திரமான ஆய்வுகளின் மூலம் பெறப்படும் தெட்டத் தெளிவான உண்மையாகும்.

  • நிழல் தேடும் சிறுவர் இல்லங்கள்

    1983 ஆம் ஆண்டு தொடர்ந்த தமிழினப் படுகொலை அத்தியாயம் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு காலப்பகுதிகளிலும், வேறுபட்ட அணுகு முறையுடனும் முன்னெடுத்து வருகின்றனர். இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணவனைப் பலிகொடுத்த விதவைகள் 40,000 தாண்டியதுடன் தாய் தந்தையை இழந்த மழலைகளும், சிறுவர்களும் என பல நூற்றுக்கணக்கான பிள்ளைகள் வாழ வழியின்றி, போக்கிடமின்றி அல்லல் பட்டனர்.
    இந்தச் சூழலின் தேவையை உணர்ந்த சமுதாய நேசிப்பாளர் சிலரின் அபராத உழைப்பினால் சிறுவர் இல்லங்கள் எனப்படும் தாய் தந்தையை இழந்து அல்லலுற்ற பல நூறு சிறார்களாலும் அதிக இழப்பின் அடிப்படையில் என தரப்படுத்தல் அடிப்படையில் தேர்ந்தெடுத்த சிறார்களை அரவணைத்து அவர்களுக்கு வேண்டிய கல்வி, உணவு, சுகாதாரம், போசாக்கு, இதர பழக்க வழக்கங்களை தங்களால் இயன்ற அளவு இச் சிறார்களுக்கு சமுதாயம் முன்னெடுத்தன. இதற்கு வேண்டிய நிதி மூலங்களைப் பெற்றுக் கொள்ள மார்க்கங்களாக எமது நாட்டில் நிற்கதியாக்கப்பட்டு வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தோரிடம், வேலை வாய்ப்பு தேடிச் சென்றோரிடமும் விசேட காலங்களில் வீதி வீதியாக எண்ணைச் சிந்து பாடியும், காய் கறித் தோட்டங்களை அமைத்தும் ஓரளவு வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டனர். மிகுதியாக தேவைப்படும் உணவு பொருட்களும் அக் கிராமங்களில் இறந்தவர்களின் வீடுகளில் நடத்தப்படும் ஆண்டமுது (திவசம்) சடங்குகளில் இம் மாணவர்களின் பராமரிப்புக் கருதி உணவுப் பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
    இவ்வாறான செயற்பாடுகளை முன்னின்று நடத்தி இச் சிறுவர் இல்லங்கள் மூலம் நாட்டின் சிறந்த பிரசைகளை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் யுத்த்தினால் தாக்குண்டு தொலைந்து போன படுவான்கரைப் பிரதேசத்தில் ஆண், பெண் சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் பழுகாமம் விபுலானந்தா ஆண்கள் சிறுவர் இல்லம், பழுகாமம் திலகவதியார் பெண்கள் இல்லம், பழுகாமம், இலண்டன் சிவன் கோயில் பெண்கள் இல்லம், பழுகாமம் செஞ்சோலை ஆண்கள் சிறுவர் இல்லம், கொக்கட்டிச்சோலை கதிரொழி அண்னர் இல்லம், கொக்கட்டிச் சோலை கதிரொழி பெண்னர் இல்லம் போன்ற பல சிறுவர் நலனோம்பு இல்லங்கள் பல்கிப் பெருகின. இதனால் இப்பிரதேசங்களில் காணப்பட்ட தாய், தந்தையை இழந்த பல நூறு சிறார்கள் இல்லங்களில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதனடிப்படையில் பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் 64 ஆண் சிறார்களும், பழுகாமம் கனகதுர்க்கை அம்மன் பெண்கள் இல்லத்தில் 68 சிறுமிகளும், பழுகாமம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் 50 ஆண்களும், கொக்கட்டிச்சோலை கதிரொளி இல்லத்தில் 70 ஆண், பெண் சிறாருமாக உள்ளீர்க்கப்பட்டனர். இதனால் இவர்களது தொலைந்த வாழ்வு மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது.
    இப்பேற்பட்ட இயங்கு தளத்தில் உருவாக்கப்பட்டு வழி நடத்தப்பட்ட சிறுவர் இல்லங்கள் யுத்த மெனும் பேராசை அரக்கனின் அட்டூழியப் பார்வைக்கு மீண்டும் கடந்த மாதம் உள்ளாகிப் போனபேது இச் சிறார்களுக்கும் சொந்தம் தேடி அலையும் சோகக் கதை தொடர்ந்தது. இதனால் இப் பிரதேசங்களில் காணப்பட்ட சிறுவர் இல்லங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அங்கு எல்லாம் அதுவாக வாழ்ந்த சின்னஞ் சிறுசுகள் மீண்டும் வெளியேற்றப்பட்டு நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டனர். இச் சந்தர்ப்பத்தில் சொந்த தேசத்தை இழந்து துயர வாழ்வை சுமந்து நிற்கதி தேடி அலையும் அற்ப சொற்ப சொந்தக் காரருடன் பலர் இணைக்கப்பட்டதுடன் சிறு அளவிலானோர் இராணுவ முகாம்களுக்கு அருகிலே அமைக்கப்பட்டிருந்த செட்டிபாளயம் இலண்டன் சிவன் கோயில் இல்லம், கல்லடி விதரி இல்லம், குருக்கள்மடம் பக்த வச்சாலா இல்லம் என்பவற்றுடன் இம் மாணவச் செல்வங்கள் தற்காலிகமாக இணைந்து கொண்டனர். இவர்களது திடீர் வருகை அங்கு ஆரம்பத்தில் இருந்த மாணவர்களுக்கே போதுமான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இருந்த போது மேலும் பல நெருக்கடிகளான உணவு, நீர் மலசல கூடம், இருப்பிடம், நாளாந்தச் செயற்பாடுகள் என்பன மிகவும் கீழ்த்தரமாக சென்றது. அத்துடன் விடுதலைப் புலிகளினால் அறிவிக்கப்பட்ட இராணுவ முகாமுக்கு 1 கிலோ மீற்றர் விலகி மக்களை செல்லுமாறு விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்துச் சிறுவர் இல்லங்களும் திடீரென முடக்கப்பட்டன.
    இந்நிலையில் சொத்து சுகங்களையும், சொந்தம் கொண்டாட மனைவி, பிள்ளைகள், சுற்றயல் சூழலுடன் வாழ்ந்த 150,000 படுவான்கரை மக்கள் எதுவுமே அற்றவர்களாக வாழ்வைத் தொலைத்த நிலையில் பிரதேசத்தை விட்டு துரத்தி அடிக்கப்பட்ட நிலையில் பிறந்த முதற்கொண்டே அனாதை எனும் பெயருடன் வாழ்ந்த இச் சின்னஞ் சிறுசுகளும் தம்மிடமிருந்த கல்விச் செல்வத்தையும் தெலைத்தபடி சொந்த தேடி அறிந்து வாழ்விலும் இணைந்து வாழ தலைப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு இலங்கையின் அனைத்துச் செயற்பாடுகளிலும் பங்காளியாகியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இணைத் தலைமை நாடுகள், சர்வதேச தொண்டு அமைப்புக்கள், இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகள் போன்ற தரப்பினர்கள் உடனடியாக ஒரு முடிவுக்கு வர வேண்டியது இக்காலத்தின் உடனடித் தேவை என்பதை இம் மக்களின் துயர வாழ்வினூடே கண்டு கொள்ள முடியும்.

  • படுவான்கரையை விட்டு கை நழுவிப் போன

  • தொலைக்காட்சி - ஓர் அறிமுகம்

    ஊடகம் பொதுசன ஊடகமாக பரிணமித்து சகல துறைகளிலும் ஊடறுத்து கணணி யுகத்தில் தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் குறிப்பிடத்தக்கதொரு இலத்திரனியல் ஊடகமாக விளங்கும் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி அறிந்து கொள்ளவேண்டியது கட்டாயமானதாகும். அந்தவகையில் அது குறித்த அறிமுகத்தையே இங்கு தருகிறேன்.

    தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவைக்கான காட்சிகளை அல்லது படங்களை (Visuals) ஓரிடத்திலுருந்து இன்னோர் இடத்திற்கு காற்றின் ஊடாக அனுப்ப முடியும் என்ற தத்துவத்தை 1883ம் ஆண்டு ஜேர்மனிய மாணவனான போல் நிப்கொப் (Paul nipkow) வெளியிட்டார். ஜோன் லொகிபேர்ட் (John logiebird) என்பவர் 1928ம் ஆண்டு இங்கிலாந்தில் BBC யின் (British Broadcasting Corporation)மத்திய அலைவரிசையைப் பயன்படுத்தி உலகின் முதலாவது கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிச் சேவையை ஆரம்பித்திருந்தார்.

    1936ல் BBC நிலையம் தினசரி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது. NTSC என்ற வர்ணத் தொலைக்காட்சி 1954ல் அமெரிக்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்ணத்தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையாகும். அதனைத் தொடர்ந்து 1970களில் உலகின் பல நாடுகளிலும் தொலைக்காட்சி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

    உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது கம்பியில்லா தொலைக்காட்சிச் சேவை, ‘கேபிள்’ தொலைக்காட்சிச் சேவை, செய்மதி தொலைக்காட்சி மீள் ஒளிபரப்புச் சேவை என பலவகையான ஒளிபரப்புச் சேவைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒளிபரப்புக்குத் தேவையான ‘அன்ரெனா’க்களை (Antenna) பொருத்தி ஒளிபரப்புச் செய்வது ஒருவகையாகும். இன்னொரு முறையான செய்மதிகள் (Satellite) மூலமும் ஒளிபரப்புச் சேவைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

    தொலைக்காட்சிச் சேவைகள் நவீன முறைகளில் அபிவிருத்தியடைந்து காணப்படுவதால் இந்த ஊடகம் முக்கியமான வளர்ச்சிக் கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது ‘இன்ரநெற்’ (Internet) மூலம் தகவல் பரிமாற்றமும், செய்மதிகள் ஊடாக மகாநாடுகளும் நடைபெறுவதால் தகவல் தொடர்பு ஊடகம் ஒரு வளர்ச்சியடைந்த நிலையை எய்தியுள்ளது.

    அண்மைக் காலங்களில் தொலை பேசியில் பேசுபவரைக் கூட நேரடியாகப் பார்த்துப் பேசக் கூடிய வகையில் தொழில் நுட்ப சேவைகள் வளர்ச்சியடைந்துள்ளன. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தெரிவு செய்து பார்க்கக் கூடியதாகவும் தொலைக்காட்சிச் சேவைகள் அமைந்துள்ளன. நாம் பார்க்கும் நகழ்ச்சிகளில் எமது உருவத்தைப் புகுத்தி அந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கக் கூடியதாகவும் நவீன ‘இன்ரக்ரிவ் ரி.வி.’ (Interactive T.V.) முறைகள் அமைந்துள்ளன.

    இவையெல்லாம் ‘கம்பியுஸ்ரீட்டரின்’ (Computer) அறிமுகத்தால் தொலைக் காட்சியில் ஏற்பட்டுள்ள வியத்தகு அபிவிருத்திகளாகும். ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற நவீன உபகரணங்களை தயாரித்து விநியோகித்து வருகின்றன. இந்த நவீன தொழில் நுட்பங்களினால் தொலைக் காட்சிக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் நெருங்கி விட்டது.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புதிய சினிமா படங்கள், ‘வீடியோ’ காட்சிகள் வரை அனைத்தையுமே இல்லங்களில் உள்ள கணணிகளில் காணக்கூடிய நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றினை இணையத்தினூடாக பார்க்கக்கூடிய ஆரம்ப முயற்சிகளை செய்வதில் சர்வதேச புகழ் வாய்ந்த ‘வெப்சைட்’ நிறுவனங்களாகிய ‘யாகூ’, ‘ஏ.ஓ.எல்.’, ‘மைக்ரோ சொப்ட்’, ‘கூகுள்’ ஆகிய நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் 65க்கும் மேற்பட்ட அலைவரிசைகளில் தொலைக்காட்சிச் சேவைகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் மட்டும் ‘கேபிள்’ தொலைக்காட்சிச் சேவைகளோடு சேர்த்து 500க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் நடைபெறுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது, பொருள்களின் உருவங்களும் படங்களும் நிகழ்ச்சியின் படங்களும் உருவங்களும் ஒளிபரப்பப்படும் அதே சமயத்தில் ஒலியும் ஒலிபரப்பப்பட வேண்டும். ஆகவே, படங்களும் உருவங்களும் மின்னலைகளாக மாற்றப்படுகின்ற அதே சமயத்தில் ஒலி அலைகளும் மின்னலைகளாக மாற்றப்பட்டு இவை இரண்டுமே ஒரே அன்ரெனா (Antenna) வழியாக ஒளி – ஒலிபரப்பப்பட்டு தாங்கி அலைகள் மூலம் சுமந்து செல்லப்பட்டு ஏற்குமிடத்தில் வான் கம்பிகளில் மோதி மீண்டும் ஒளியாகவும் ஒலியாகவும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் மாற்றப்பட்டு தொலைக்காட்சித் திரையில் காட்சிகளையும் அவற்றிற்குரிய ஒலிகளையும் தருகின்றது.

    அதனால் தொலைக்காட்சி எனும் வெகுஜன ஊடகம் மனித தேடல்களில் ஆதாரமாக அமையும் குரலொலி (Voice), தரவுகள்(Data), ஒளியுரு (Video) ஆகிய மூன்று முக்கியமான தொடர்பு முறைகளைக் கைக்கொண்டு கட்புல (ஒளி) செவிப்புல (ஒலி) சாதனமாக செயற்பட்டு சமூகத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்திவருகின்றது.

    எஸ். மோசேஸ்.

  • தொடர்பு சாதனங்கள் பற்றிய ‘புரிதல்`

    தொடர்பு சாதனங்கள் பற்றிய புரிதல் மக்களிடத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையேல் அவை மக்களை தம் வழி ஈர்த்து எங்கேயோ கொண்டு சென்றுவிடும். அதனை தெளிவுறுத்துவதாகவே இக்கட்டுரை அமைகிறது..

    இன்றைய மனித சமுதாயத்தில் எமது வாழ்வோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவை தகவல் தொடர்பு சாதனங்களாகும். இவ்வகையில் வெகுஜன தொடர்பு சாதனங்களாக பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் போன்ற அச்சு சார்ந்த ஊடகங்களையும் வானொலி, தொலைக்காட்சி, கணணி, சினிமா போன்ற இலத்திரனியல் சார் ஊடகங்களையும் கூறிக்கொள்ளலாம். இவ்வாறான தொடர்பு சாதனங்கள் ஒருவித சமூக அமைப்பை கட்டிக்காப்பதில் மிகவும் வலிமையாகச் செயற்படுகின்றன.

    இவை மேலைத்தேய நாடுகளைப் போலவே கீழைத்தேய நாடுகளிலும் மிகுந்த தாக்கம் செலுத்தி வருவதனை காணமுடிகிறது. இவ்வகையில் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் சமூகத்தில் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றி வருகின்றன. அவற்றில் தகவல்களை அளித்தல் பொழுது போக்கு எனும் வழக்கமான பணிகளையும் மீறி பொதுக்கருத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

    இருபத்தொராம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பொறியினை அழுத்தித் தொழில் புரியும் நவீன உலகின் தன்மைக்கேற்ப எமது வாழ்க்கை முறைகளையும் மாற்றியமைத்துக் கொள்வது அவசியமாகும். அவ்வாறாக செயற்படும் போது தொடர்பு சாதனங்களானது நமது வாழ்க்கையில் எப்படியோ நுழைந்து விடுகின்றன. எனவே, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவற்றை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம். ஆகவே, தொடர்பு சாதனமானது சமூகமயமாக்கம், சமூகமாற்றம் என்பவற்றில் மிகுந்த செல்வாக்கினைச் செலுத்துகின்றன.

    இச்சாதனங்கள் மூலம்தான் அரசியல், பொருளாதாரம், மனித நடவடிக்கைகள் என பல்வேறு விடயங்கள் சமூகத்தளத்தில் அலசப்படுகின்றன. அந்த வகையில் இச்சாதனங்கள் மக்களின் பொதுமன்றமாக ஜனநாயக அடிப்படைகளுள் ஒன்றாக செயற்படுகின்றன. அத்தோடு பல்வேறு விதமான தனிமனித மதிப்பீடுகளை உருவாக்குவதிலும், நிலை நிறுத்துவதிலும், நமது நடையுடை பாவனைகள், பேச்சு, உறவுமுறைகள் போன்றவற்றிலும், நமது நேரத்தை தீர்மானிப்பதிலும் இவற்றின் பங்கு குறிப்பிடத்தக்கவைகளாகும். அந்த வகையில் இத்தொடர்பு சாதனங்களின் பன்முகத்தாக்கம் அல்லது செல்வாக்கு உலகளாவிய ரீதியில் அனைத்து சமூகத்திலும் காணப்படுகின்றது.

    பெருகிவரும் புதிய தொழில் நுட்பங்கள் மூலம் நினைத்தவுடன் அதே கணத்தில் செய்திகளையும் தகவல்களையும் அச்சாகவும் விம்பங்களாகவும எங்கு வேண்டுமானாலும் அனுப்பவும் பெறவும் முடிகிறது. தொடர்பூடகங்களானது உலகத்தை ஒன்றிணைத்து ஒரு கிராமமாக மாற்றி உலக சந்தைகளை உலக கலாசாரத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

    மிக அதிகளவில் தொடர்பு சாதனங்கள் நம் வாழ்வில் ஊடுருவியிருக்கின்றன. செல்வந்தர்கள், வறியவர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் போன்ற வேறுபாடுகளின்றி அனைவருமே பயன்படுத்துகின்றனர். வாழ்க்கை முறைமையிலிருந்து பிரிக்க முடியாத அம்சமாகிவிட்டது. இருந்த போதிலும் அந்தந்த சமூகத்தின் தன்மைகளுக்கும் கட்டமைப்புகளுக்கும் ஏற்ப இவற்றின் செல்வாக்கு மாறுபடுகின்றன.

    விரும்பியோ விரும்பாமலோ பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள மனிதனுக்கு பல்வேறுபட்ட விடயங்களை இடித்துரைக்கும் ஆற்றல் வாய்ந்த தொடர்பு சாதனங்கள் மக்களின் மனங்களை அசைய வைப்பதோடு சிதைய வைக்கும் தன்மையும் கொண்டவை. நம்மைப்பற்றி மற்றவர்களைப்பற்றி சமூகத்தைப்பற்றி ஏராளமான தரவுகளையும் தகவல்களையும் அறிவிப்பது மட்டுமன்றி அறிவுறுத்தும் ஆற்றலும் வாய்ந்த தொடர்புசாதனத்துறை தனிப்பெருந்துறையாக வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் சமூகத்தின் பல்வேறுபட்ட மட்டங்களிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, தீர்மானங்களை முன்மொழியும் பாரிய சக்தியாகவும் விளங்குகின்றது.

    ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இத்தொடர்பு சாதனங்களுள் தொலைக்காட்சி முக்கியமானதொரு இடத்தினைப் பெறுகின்றது. ஏனைய தொடர்பூடகங்களைப் போலன்றி குரலொலி (Voice), தரவுகள் (Data), ஒளியுரு (Video) ஆகிய மூன்று முக்கியமான தொடர்பு முறைகளைக் கைக்கொண்டு கட்புல (ஒளி) செவிப்புல (ஒலி) சாதனமாக செயற்பட்டு சமூகத்தில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்துவது இதுவேயாகும்.

    சமூகநிலையில் சகலர் மீதும் இச்சாதனங்கள் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தி பாதிப்பினை உண்டுபண்ணுகின்றன. பல்வேறுபட்ட விடயங்களையும் இலகுவில் உள்வாங்கி மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதால் அவர்கள் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் உள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    இன்றைய சூழலில் பல தொலைக்காட்சி அலைவரிசைகள் ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. அறிவியல் சார்ந்த பயனுள்ள நிகழ்ச்சிகள் சில ஒளிபரப்பப்படுகின்ற போதிலும் வர்த்தக நோக்கம் கருதிய நிகழ்ச்சிகளே மிகவும் அதிகமாக ஒளிபரப்பாகின்றன. அவை பெரும்பாலும் மக்களை இலகுவாகக் கவரும் களிப்பூட்டல் (Entertainment) நிகழ்ச்சிகளாகவே காணப்படுகின்றன. இவற்றில் அதிகமானவை உண்மைக்குப் புறம்பான மாயலோக காட்சிகளைக் கொண்டமைந்ததாகவும், யதார்த்தத்திற்கு மாறான தீர்மானங்களை காட்டுவதாகவும், வன்முறை, பலாத்காரம் நிறைந்ததாகவும் அமைந்துள்ளன.

    இதன் விளைவாக மக்கள் தவறான நடத்தை முறைகளைக் கைக்கொள்ளவும் தவறான தீர்மானங்களை தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கின்றன. குறிப்பாக சமூகத்தில் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் பலாத்காரம், வன்முறைகள், போதைப் பொருள் பாவனை போன்ற சமூகப்பிறழ்வுகள் உருவாகுவதற்கும் உடல் உளரீதியான பாதிப்பு, உறவுநிலை ரீதியான பாதிப்பு, பிற நாகரீகத் தாக்கம், பிற பண்பாட்டுத்தாக்கம், பொருளாதார ரீதியான பாதிப்பு, பால்நிலை ரீதியான பாதிப்பு என்பவைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியும் உள்ளனர்.

    சாதாரணமாக மக்கள் தமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெறுவதற்கு அல்லது தீர்மானங்களை தேர்ந்தெடுப்பதற்கு மற்றவர்களை நாடுகின்றனர். அது நிறைவேறாத போது பெரியவர்கள் அல்லது துறைசார் அறிஞர்களிடம் கலந்தாலோசிக்காது ஊடகங்களினூடாக குறிப்பாக தொலைக்காட்சியில் தாம் கண்ட கேட்ட விடயங்களைக் கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றனர். பல சமயங்களில் அவை தமது சமூக சூழலுக்கும் நடத்தைகளுக்கும் பொருந்தாதவைகளாக அமைந்து விடுகின்றன. அதனால் இவர்கள் மென்மேலும் சிக்கல்களுக்குள் தள்ளப்படுகின்றனர்.

    உலகலாவிய ரீதியில் நோக்கும் போது வெகுஜன தொடர்பூடகங்கள் தமக்கென தனித்துவமான இடத்தினை பெற்றிருப்பதோடு பல்வேறுபட்ட துறைகளிலும் தமது செல்வாக்கினையும் செலுத்தி வருகின்றது. இதன் காரணமாக அதனது போக்குகளும் தன்மைகளும் சமூகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.

    ஆகவே இவ்வாறானதோர் சூழலில் மக்கள் உகந்தவற்றை பின்பற்றவும் ஏனையவற்றை அதன் தன்மைகளுக்கேற்ப ஏற்றுக்கொள்ளவும் அல்லது புறந்தள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது இத்தொடர்பு சாதனங்கள் குறித்த புரிதல் மக்கள் மத்தியில் தெளிவாக ஏற்பட வேண்டும். அதே போன்று இத்துறையில் பணியாற்றுபவர்களும் சமூக அறத்தை அறிந்து அவற்றின் அடிப்படையில் கடமையாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். இல்லையேல் பல்லின, மொழி, மதத்தினர் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இச்சாதனங்களால் குழப்பங்களும் கலவரங்களும் தோன்றி அழிவுகளும் சீர்கேடுகளும் மேலோங்கிவிடும்.

    எஸ். மோசேஸ்.

  • படைப்போம்.

    இலக்கியங்கள், வரலாறுகள் படைக்கப்படுகின்றன. அவற்றிற்காக எவரும் விட்டுக் கொடுக்கவேண்டும் எதனையும் இழக்கவும் வேண்டும் என்றில்லை.
    யாரையும் யாரும் வற்புறுத்தவோ கட்டுப்படுத்தவோ கூடாது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
    அதனால் இந்தப் பக்கத்தில் விட்டுக்கொடுக்க எண்ணமில்லாத எல்லோரும் எழுதலாம்.

Footer:

The content of this website belongs to a private person, blog.co.uk is not responsible for the content of this website.